Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த 9 அவதூறு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
சுப்பிரமணியன் சுவாமி மீது 4 வழக்குகளும், செந்தில் பாலாஜி மீது 2 வழக்குகளும், செல்வ கணபதி மீது 2 வழக்குகளும், மைதீன் கான் மீது தலா ஒரு 1 வழக்கும் என பதியப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதலமைச்சரை தனிப்பட்ட விதமாக தலைவர்கள் விமர்சித்தால், தமிழ்நாடு அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடர முடியாது எனவும் அவதூறு வழக்கை ரத்து செய்த நீதிபதி தெரிவித்திருக்கிறார். முதலமைச்சரின் துறை சார்ந்த நடவடிக்கைகளை விமர்சித்தால் மட்டுமே அவதூறு வழக்குத் தொடர முடியும் எனவும் உயர் நீதிமன்ற நீதிபதி கூறியிருக்கிறார்.